இதற்கு அவருடன் பணிபுரியும் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் நண்பர்கள் விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, குடிபோதையில் பின்னணியில் பாடல்கள் ஒலிக்க சிறைக்காவலர் சந்திரன் நடனமாடும் காட்சிகள் முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதனையடுத்து, சேலம் மத்திய சிறையின் சிறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி சந்திரன் கோவை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவரை பணி இடைநீக்கம் செய்து சிறைக் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.