குடிபோதையில் குத்தாட்டம் போடும் சிறை காவலர் [வீடியோ]

புதன், 10 பிப்ரவரி 2016 (10:05 IST)
குடிபோதையில் குத்தாட்டம் போட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயிலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சந்திரன் [58]. இவர், சென்னையில் கடந்த 26ஆம் தேதி நடந்த குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின்போது சிறந்த சிறைக்காவலர் சான்றிதழ் வாங்கியுள்ளார்.
 
இதற்கு அவருடன் பணிபுரியும் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் நண்பர்கள் விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, குடிபோதையில் பின்னணியில் பாடல்கள் ஒலிக்க சிறைக்காவலர் சந்திரன் நடனமாடும் காட்சிகள் முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 
 
இதனையடுத்து, சேலம் மத்திய சிறையின் சிறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி சந்திரன் கோவை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவரை பணி இடைநீக்கம் செய்து சிறைக் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வீடியோ கீழே:
 

வெப்துனியாவைப் படிக்கவும்