இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகருக்கு, தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், ஆவடி, அம்பத்தூர், உள்ளகரம் - புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில், குடிநீர் பணிகள் முடிவடைந்துள்ளதால், இந்த பகுதிகளுக்கும், குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க ஆணையிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.