சென்னைக்கு தினசரி குடிநீர்: ஜெயலலிதா உத்தரவு

புதன், 25 நவம்பர் 2015 (00:21 IST)
சென்னை நகருக்கு, தினசரி குடிநீரை வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை நகருக்கு, தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், ஆவடி, அம்பத்தூர், உள்ளகரம் - புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில், குடிநீர் பணிகள் முடிவடைந்துள்ளதால், இந்த பகுதிகளுக்கும், குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க ஆணையிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்