மறைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் !

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:32 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார். 

 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான தா பாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
இந்த நிலையில் தா பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருக்கு வயது 89. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்