பலத்த பாதூகாப்புடன் மைதானத்திற்குள் நுழைந்த வீரர்கள்!

செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (18:02 IST)
சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலை  பகுதியில் போராட்டம் வலுத்தது. போராட்டத்தில் ஏடுபட்ட போராட்டகாரர்கள் மீது தடியது நடத்தப்பட்டது. 
 
இதன் இடையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடையாறு ஹோட்டலில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 
 
காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த கூடாது என எதிர்ப்புகள் வலுத்தது. ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் சென்னை அண்ணாசாலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இதனால், ஹோட்டலின் பின்வாயில் வழியாக இரண்டு பேருந்துகளில் போலீஸ் பாதுகாப்போடு வீரர்கள் மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். 
 
வீரர்கள் பத்திரமாக மைதானம் வந்தடைந்த நிலையில், பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சொன்ன நேரத்தில் போட்டி நடைபெறும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்