நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆ.திருமலாபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, விவசாயி. இவரது மனைவி அற்புதக்கனி (வயது 47). அதே பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (55). இவருக்கும் அற்புதக்கனிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி, பழகி வந்தனர். இதுபற்றி அறிந்த பொன்ராஜின் மகன் வசந்த் (30) அற்புதக்கனியிடம் சென்று எனது தந்தையுடன் இனிமேல் பேசக்கூடாது என்று கூறினார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து சந்தித்து பேசி வந்தனர்.