ஏற்கனவே ராம்குமாரை 3 நாள் காவலில் எடுத்த காவல்துறை, ராம்குமாரையும், பிலால் மாலிக்கையும் வைத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் ராம்குமார் தான் கொலையை செய்ததாக பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்தது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் அழைத்துச்செல்லப்பட்டு கொலை செய்ததை ராம்குமார் நடித்துக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.