இந்த வலைத்தளங்களை பார்வையிட வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளதாகவும், மேற்படி தொகை பெங்களூரில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதையும் விசாரணையில் கூறியுள்ளனர். இதையடுத்து, இந்த ஆபாச வலைத்தளங்களை நடத்திவந்த சித்தாத்தா வேலு மற்றும் அவரது மனைவி பிரிசில்லா மார்கிரெட் தன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.