மாணவர்களை கொடூரமாக தாக்கும் பள்ளி தாளாளர்: பரபரப்பு வீடியோ

திங்கள், 14 டிசம்பர் 2015 (17:19 IST)
திருச்சி, உறையூரில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியின் தாளாளர் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை பூட்ஸ் காலால் மிதித்து மிகக் கொடூரமாக தாக்கும் காட்சி  வாட்ஸ் ஆஃப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை வெகு நாட்களாக மிகக் கொடூரமாக தாளாளர் தாக்குவதாகவும், சக மாணவர்களுக்கு மத்தியில் கொடுமைப்படுத்துவதாகவும், அவமானப்படுத்துவதாகவும், தங்களுடைய உயிரைக் காப்பாற்றக் கோரியும் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வாட்ஸ் ஆஃப் மூலம் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் அந்த பள்ளியின் தாளாளர் மீது மாவட்ட கல்விதுறை அதிகாரி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் இந்த வீடியோ காட்சியை பார்த்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மாணவர்களை கொடூரமாக தாக்கும் காட்சி உங்கள் பார்வைக்கு,,,,,,,,
 

வெப்துனியாவைப் படிக்கவும்