அடையாறு ஆற்றின் அருகில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

செவ்வாய், 1 டிசம்பர் 2015 (14:09 IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிப்படவுள்ளதால், அடையாறு ஆற்றின் அருகில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
 

 
இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பாக விடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் தற்போது 5000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.
 
ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பதால், உபரி திறந்துவிடும் அளவு 7500 கன அடிவரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்