கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (12:02 IST)
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!
 
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் கடந்த 13ம் தேதி ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அடுத்தடுத்து கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. அதன் பின்னர் அந்த கல்லூரியில் உள்ள மொத்த ஆசிரியர்கள் என 570 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து  அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்