கூவம் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் கடல் நீர் கருமையாகக் காட்சியளிக்கின்றது

ஞாயிறு, 15 நவம்பர் 2015 (13:30 IST)
சென்னையில் உள்ள கூவம் ஆறு கடலில் கலக்கும் பகுதியாகிய மெரினா கடற்கரையில் கடல் நீர் கருமை நிறத்தில் துர்நாற்றத்துடன் காணப்படுகின்றது.


 

 
சென்னையின் பிரதான சாக்கடை ஆறக கூவம் ஆறு இருந்து வருகின்றது. இந்த ஆற்றின் வழியாச் செல்லும் நீர் கடலில் கலக்கின்றது.



 

 
இதனால், கூவம் ஆறு கடலில் கலக்கும் பகுதியான மெரினா கடற்கலையில், கடல் நீர் கருமை நிறமாகக் காட்சியளிப்பதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது.


 
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக கூவம் ஆற்றின் வழியாக கடலில் கலக்கும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.


 


இந்நிலையில் கடல் நீரி மிகவும் கருமையாக காட்சியளிப்பதையும் துர்நாற்றம் அதிகமாக வீசுவதையும் பார்க்க முடிகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்