ஆறு மாதம் கழித்து விலை குறைந்த சிலிண்டர்! மக்கள் நிம்மதி பெருமூச்சு!

திங்கள், 2 மார்ச் 2020 (09:51 IST)
கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து விலையேறி வந்த மானியமில்லா சிலிண்டர் விலை இந்த மாதம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மானியமில்லா சிலிண்டர் விலை 590 ரூபாயாக இருந்தது. ஆனால் மாதாமாதம் சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே சென்றதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். கடந்த மாதம் 147 ரூபாய் விலை அதிகரித்த சிலிண்டர் 881 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சிலிண்டரின் கடும் விலையேற்றத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்த மாதம் சிலிண்டரின் விலையில் 55 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் மானியமில்லா சிலிண்டரின் விலை 826 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக சமையல் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்