இளம் பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்திலே ஆர்வத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு அதன் வளர்ச்சிக்காக விருது நகர், சிவகாசி பகுதிகளிலே இடையறாமல் அரும்பாடு பட்ட அருமை நண்பர் சொக்கர் மறைந்து விட்டார் என்ற செய்தியினை, அவருடைய நெருங்கிய நண்பரும், வர்த்தகச் சங்கத் தலைவர்களில் ஒருவருமான மதுரை ரெத்தினவேலு தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தபோது அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவருடைய துணைவியார், மகன் மகள் மற்றும் குடும்பத்தார், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியில் அவரோடு இணைந்து பணியாற்றியவர்கள் ஆகிய அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.