திமுக கூட்டணிக்காக சென்னை வருகிறார் குலாம்நபி ஆசாத்

புதன், 10 பிப்ரவரி 2016 (22:00 IST)
தமிழகத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்ய, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி சென்னை வர உள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, கோவையில், நடிகையும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளருமான நடிகை குஷ்பு  கூறுகையில், தமிழகத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்ய, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்  பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று சென்னைக்கு வர உள்ளார் என்றார்.
 
தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி ரகசியமாக முயற்சி செய்து வருவது குறிப்பிடதக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்