கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்திய இளம்பெண்: திடீரென கழுத்தை அறுத்து கொண்டதால் பரபரப்பு!

வியாழன், 10 நவம்பர் 2022 (08:18 IST)
கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்திய இளம்பெண்: திடீரென கழுத்தை அறுத்து கொண்டதால் பரபரப்பு!
கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்திய இளம்பெண் ஒருவர் போலீசார் கண்டித்ததால் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பெண் என்ஜினீயர் ஒருவர் பழகி உள்ளார். முதலில் சாதாரண நட்பாக பழகிய இருவரும் அதன்பின் லெஸ்பியன் உறவில் இருந்ததாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து கல்லூரி மாணவியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். பெண் எஞ்சினியரை சந்திக்க கூடாது என்றும் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் திடீரென இருவரும் வேறு ஊருக்கு சென்று வீடு எடுத்து குடும்பம் நடத்தியதாக தெரிகிறது. 
 
இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து கவுன்சிலிங் கொடுத்தனர். கவுன்சிலிங்கிற்கு பிறகு கழிவறை செல்வதாகக் கூறிய இளம்பெண் கழிவறையில் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டதாக தெரிகிறது.
 
இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்