கல்லூரி வகுப்புகள் தொடக்கம் !

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:10 IST)
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட்9 ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரு ஆகஸ்ட் 9 ஆம் தேதி  முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 9 ஆம் தேதி முதல் அனைத்துப் பேராசிரியர்களும், பணியாட்களும்,  அனைத்து அலுவல் நாட்களிலும் கல்லூரிகளுக்கு  வருகை தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்