கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 3 பேரை கைது செய்தது என்ஐஏ

புதன், 7 டிசம்பர் 2022 (16:59 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் சிலிண்டர் வெடித்து சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தின் அடிப்படையில் ஏற்கனவே 6 பேரை கைது செய்தது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தற்போது மேலும் இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள முகமது தௌபீக், உமர் பரூக் மற்றும் பரோஸ்கான் ஆகிய மூன்று பேர்களிடம் என்ஐஏ விசாரணை செய்து வருவதாகவும் இவர்களிடமிருந்து திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்