கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளதாக கூறியுள்ள ரமணன், அதிக பட்சமாக கேளம்பாக்கம் பகுதியில் 4 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், அடுத்த படியாக குடவாசல் பகுதியில் 3 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும், ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.