ஊரடங்கால் கைமேல் வந்த பலன்... ஸ்டாலின் மகிழச்சி!

சனி, 29 மே 2021 (12:00 IST)
கடந்த ஒரு வார ஊரடங்கால் கொரோனா எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தகவல். 

 
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து இயங்கும் என தமிழக அரசு கூறியுள்ளது.
 
இந்நிலையில், இதுகுறித்த அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஒருவார ஊரடங்கால் கொரோனா எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது. கொரோனா வரைபடம் தட்டையான நிலையை எட்டவே ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்