கருணாநிதியின் 3வது ஆண்டு நினைவு தினம்: தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (20:35 IST)
முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதி அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது
 
இதனை அடுத்து திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டு வாசலிலேயே கலைஞர் படம் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த வேண்டாம் என்றும் அவரவர் வீட்டு வாசலிலேயே அஞ்சலி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்