கடந்த சனிக்கிழமை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் முதன் முதலாக முதல்வருக்கு நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், லண்டன் மருத்துவர் ரிச்சார்டின் ஆலோசனைப்படி சிகிச்சைகள் நடந்து வருவதாக அதில் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் முதல்வர் குணமடைந்து வருகிறார். கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் அவ்வப்போது கொடுக்கப்பட்டு வருகின்றன.