திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று 01-07-15 [புதன்கிழமை] சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவரின் கன்னத்தில் அறைவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது.
இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, "அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், வெற்று விளம்பரத்திற்காகவும் 01-07-2015 அன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஸ்டாலின், அந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
பொது இடங்களில் எல்லோருக்கும் சம அளவு உரிமை உள்ளது என்பதையும், யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்பதையும் உணர்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை ஸ்டாலின் இனியாவது காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.