இதனால் சசிகலாவுக்கும், ஓபிஎஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது போல, தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சமிக்கும் இடையே ஏற்பட்டுவிடுமோ என பேசப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிடுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதை, சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அதிமுகவினர் விரும்பவில்லை. ஆனால் தினகரன் விடாப்பிடியாக போட்டியிட்டே தீருவேன் என தன்னிச்சையாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
ஏன் உங்களுக்கு போட்டியா வந்துடுவேன்னு பயமான்னு எடப்பாடியிடம் தினகரன் கேட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தனது நெருக்கமானவர்களிடம் கூறியதாக அதிமுக வட்டாரத்தில் ஒரு தகவல் உலா வருகிறது. கட்சியோட நல்லதுக்கு சொன்னா தினகரன் அத காதுகொடுத்துக்கூட கேட்கமாட்டீங்குறாரு என வெளிப்படையாகவே எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதாக பேசப்படுகிறது.