பிறந்த நாள் பார்டியில் மோதல்...வாலிபர் கொலை...4 பேர் கைது

திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:01 IST)
நெல்லை மாவட்டத்தில் பிறந்த நாள் பார்டியில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை கொன்று  நாடகமாடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளை பெரும்பாள்புரம் என்ஜி ஓ காலனியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ஹரிஹரமுத்து(23) கூலித் தொழிலாளினான இவருக்கு, பிரீத்தம், செல்வராஜ், செல்வகுமார்,  சுகுமார் ஆகிய   நான்கு நண்பர்கள் இருந்தனர்.

பிரீத்தம் என்பவரின்   பிறந்த நாளுக்கு அவரது வீட்டில்  பிறந்த நாள்  பார்ட்டியின்  போது ஏற்பட்ட மோதலில் பிரீத்தம், செல்வராஜ், சுகுமார்  , செல்வகுமார் ஆகிய 4 பேரும் ஹரிஹரமுத்து என்ற வாலிபரை  மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு விபத்து ஏற்பட்டதாக நாடகமாடிய நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்