பிச்சை எடுக்க குழந்தைகள் வாடகைக்கு கிடைக்கும்: பகீர் விளம்பரம்

வெள்ளி, 3 ஜூன் 2016 (19:10 IST)
திருச்சியில் பிச்சை எடுப்பவர்களுக்கு குழந்தைகளை வடைக்கும் கொடுத்து பெண்கள் சம்பாத்திக்கிறார்கள்.


 

 
பிச்சை எடுக்கும் பெண்களின் தோளில் எப்போதும் குழந்தைகள் தொங்கி கொண்டிருக்கும். குழந்தைகளை வைத்து பசி என்ற வார்த்தையை உச்சரித்து பிச்சை எடுப்பது வழக்கம். அதுபோல பிச்சை எடுக்கும் கூட்டத்துக்கு குழந்தைகளை வாடகைக்கு கொடுத்து அதை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.
 
திருச்சி-மதுரை சாலையில் உள்ள ஒரு கிராமத்தில் இதுபோல பிச்சை எடுக்கும் கூட்டத்துக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வாங்கி கொண்டு குழந்தைகளை பிச்சை எடுப்பவர்களுக்கு வாடகைக்கு கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் குழந்தைகள் கடத்தி வந்து பிச்சை எடுப்பதும் அதிகமாகி கொண்டிருக்கிறது. இதுபோல் ஒரு சிலர் பிச்சை எடுத்து விட்டு குழந்தைகளை அனாதையாக விட்டு செல்கின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்