சென்னை புரசைவாக்கம் கெல்லீஸில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் தரைத் தளத்தில் 23 சிறுவர்களும்,முதல் தளத்தில் 20 சிறுவர்களும் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை காவலர்களை அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு 17 சிறுவர்கள் காம்பவுண்டு சுவரின் மேல் ஏறி குதித்து அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக சிறுவர் சீர்திருத்தப் பள்ளி காவலர்கள் தெரிவிக்கின்றனர்.