நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு.. சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை..!

Siva

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (17:37 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியின் தாக்கம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் 21 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், கோயம்புத்தூர், மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 5 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
 
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருகிறது: இதன் காரணமாக அக்டோபர் 25: காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அக்டோபர் 27: இது புயலாக வலுவடையக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக, கடலோர மாவட்டங்கள், குறிப்பாக வட மாவட்டங்களில், மழைக்கான வாய்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்