பாடி மேம்பாலத்திலிருந்து பயணி விழுந்து சாவு! – சென்னையில் பரபரப்பு!

ஞாயிறு, 16 ஜனவரி 2022 (15:08 IST)
சென்னையில் பாடி மேம்பாலத்தில் மது அருந்திய ஆட்டோ டிரைவர் ஏற்படுத்திய விபத்தில் பயணி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் டிவி மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் பாக்கியராஜ். நேற்று முன்தினம் இவர் தனது நண்பரை சந்தித்துவிட்டு பிரபாகரன் என்பவரது ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். ஆட்டோ பாடி மேம்பாலத்தில் செல்லும்போது மது அருந்தியிருந்த பிரபாகரன் வேகமாக சென்று பாலத்தின் தடுப்பில் மோதியதால் பாக்கியராஜ் தவறி விழுந்தார்.

பாலத்தின் மீதிருந்து 25 அடி உயர பள்ளத்தில் விழுந்ததில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்