ஏழைகளுக்கு 50 ஆயிரம்: மதுரையில் கையெழுத்து! – ஜெயகோபாலுக்கு ஜாமீன்!

திங்கள், 11 நவம்பர் 2019 (15:21 IST)
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயகோபால் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிக்காக 50 ஆயிரம் செலவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும் மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்