சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் தந்தை சாமியப்பன் (வயது 100). சென்னையில் உள்ள மனிதநேய அறக்கட்டளையின் அறங்காவலர்களின் ஒருவராக உள்ளார். ஆனால், இவர், கரூர் அருகே உள்ள தும்பிவாடி கிராமத்தில் வசித்து வருகின்றார். அங்கு விவசாய பணி செய்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.