சென்னை மேயர் சைதை துரைசாமியின் தந்தை சாமியப்பன் காலமானார்

திங்கள், 5 அக்டோபர் 2015 (05:19 IST)
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் தந்தை சாமியப்பன் காலமானார்.
 
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் தந்தை சாமியப்பன் (வயது 100). சென்னையில் உள்ள மனிதநேய அறக்கட்டளையின் அறங்காவலர்களின் ஒருவராக உள்ளார். ஆனால், இவர், கரூர் அருகே உள்ள தும்பிவாடி கிராமத்தில் வசித்து வருகின்றார். அங்கு விவசாய பணி செய்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
 
இதனையடுத்து, சிகிசைச்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி சாமியப்பன்  நேற்று காலமானார்.
 
மறைந்த சாமியப்பனுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவரது உடல் நல்லடக்கம் இன்று (திங்கட்கிழமை) மாலையில்  6 மணி அளவில் மணிக்கு கரூர் அருகே உள்ள தும்பிவாடி கிராமத்தில் நடைபெறுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்