சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் திடீர் மாற்றம்

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (23:45 IST)
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் திடீர் என மாற்றம் செய்யப்பட்டார்.
 

 
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் இதுவரை இருந்து வந்தார். இந்த நிலையில், அந்த பதவியில் இருந்து அவர், திடீர் என மாற்றம் செய்யப்பட்டார்.  அவருக்கு பதிலாக, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக டி.கே.ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் சிறைத்துறை ஏடிஜிபியாக மாற்றம் செய்யப் பட்டார். மேலும், தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை பிறப்பித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்