சென்னையில் கனமழையால், ரயில் தண்டவாளங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்று கண்காணிக்க ரயில்வே ஊழியர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகளின் வருகை குறைந்து இருப்பதால் குறைந்த அளவே மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்றும், இதனால் ரயில் சேவை பாதிக்கப்படாது என்றும் தொடர்ந்து ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.