இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்ணை வைத்து அவை எந்த வங்கிக் கிளைகளில் இருந்து எடுக்கப்பட்டது என்று விவரத்தை சேகரித்து வருகின்றனர். இதில் பிடிப்பட்டுள்ள 5 பேரிடம் விசாரணை நடத்தியதில் இது ஹவாலா பணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் சிக்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.