மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை!

வெள்ளி, 19 நவம்பர் 2021 (19:28 IST)
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டும் விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்பதும், வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்