தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி, மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 3 பேருக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண்துறையும், எஸ்.பி.வேலுமணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையும், கோகுல இந்திராவுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.