அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

புதன், 7 டிசம்பர் 2022 (17:23 IST)
தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,  அடுத்த 3 மணி நேரத்தில் 17  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதில்,  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராம நாதபுரம், சிவகங்கை, தெங்காசி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,   நாகை  ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய   மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

ALSO READ: கனமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: சென்னை மாநகராட்சி
 
மேலும், வங்கக்கடலில் புயல் எச்சரிக்கையை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி,  மா நிலப்பேரிடம் மீட்புப் படையினர் 6 குழுக்கள்,  கடலூர், சென்னை, நாகை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்