செல்போன் திருடர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்

வெள்ளி, 2 அக்டோபர் 2015 (07:55 IST)
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செல்போன் திருடர்களை பயணிகள் மடக்கி பிடித்தனர்.

சென்னை நசரத் பேட்டையைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அவருடைய பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை 2 பேர் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
 
இதனால், அவர் கூச்சல் போட்டார். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் செல்போன் அந்த திருடர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, பிடிபட்ட அகமது மற்றும் அக்பர் அலி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்