இந்நிலையில் சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளியின் தென் மண்டல அலுவலகத்தை இன்று காலை 11 மணிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினரும் சேர்ந்து மத்திய அரசின் சமஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்த்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்நிகழ்வுக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதில் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசை நோக்கி சமஸ்கிருத வாரத்தை திரும்ப பெற வேண்டும் என மாற்று சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று கோஷமிட்டனர்.