இந்நிலையில், பிஎஸ்என்எல் முறைகேடு சம்பந்தமாக திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் கேட்கப்பட்ட பல கேள்விளுக்கு தாயாநிதி மாறன் முறையாகப் பதில் அளிக்கவில்லை என்றும், சில கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்ததாகவும் சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால், தயாநிதி மாறனை காவலில் எடுத்து விசாரித்தால் தான் முக்கியத் தகவல்கள் கிடைக்கும். எனவே, அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்பதால், தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.