காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில், இதை தடுத்துநிறுத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை தமிழக எம்.பி.க்கள் 59 பேர் சந்தித்து மனு கொடுக்கின்றனர்.
மாலை 5.15 மணியவில், நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்.பி.க்கள் அனைவரும் பிரதமர் மோடியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து மனு கொடுக்கின்றனர்.
துணை சபாநாயகர் தம்பித்துரை உள்ளிட்ட 48 அதிமுக எம்.பி.க்கள், கனிமொழி, திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், தங்கவேலு ஆகிய 4 திமுக எம்.பி.க்கள், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), டி.கே.ரங்காஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) அன்புமணி ராமதாஸ் (பாமக) சுதர்சன் நாச்சியப்பன் (காங்கிரஸ்) புதுச்சேரி கண்ணன் ராதாகிருஷ்ணன் (என்.ஆர்.காங்கிரஸ்) ஆகிய 59 எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியை ஒன்றாக சென்று சந்தித்து மனு கொடுக்கின்றனர்.