தமிழகத்தில், பொது மக்களின் குறைகளைத் தீர்க்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், அம்மா அழைப்பு மையம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது.
இந்த நம்பரில் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்களது குறைகளை தெரிவித்தால், அது குறித்து, சம்பந்தப்பட்ட துறைக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டு, அதற்கு உடனடி தீர்வு காணப்படும்.