தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் சென்ற அரசு பேருந்து பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல்லுக்கு இடைப்பட்ட மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
படுகாயமடைந்த 30 பேரும் தருமபுரி மற்றும் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.