300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி

செவ்வாய், 20 ஜனவரி 2015 (17:36 IST)
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, ஒகேனக்கல் மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
 
தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் சென்ற அரசு பேருந்து பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல்லுக்கு இடைப்பட்ட மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
 

 
தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர், பேருந்தில் சிக்கியவர்களை பொதுமக்களின் உதவியுடன் மீட்டனர். இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 
படுகாயமடைந்த 30 பேரும் தருமபுரி மற்றும் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்