நெல்லை பெருமாள் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வியாழன், 7 ஜனவரி 2016 (00:55 IST)
நெல்லை பெருமாள் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 

 
நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவல கட்டுப்பாட்டு அறைக்கு, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நெல்லை பெருமாள் கோயிலில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டான்.
 
இந்த தகவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, நெல்லை பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், சோதனையில் எந்துவும் கிடைக்கவில்லை. இது வெறும் வதந்தி என தெரிய வந்தது. இருப்பினும் இது குறித்து, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பெட்ரோல் குண்டு வெடித்த நிலையில், நெல்லை பெருமாள் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்