மதுரையில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 5 பேர் உயிரிழப்பு

வியாழன், 10 நவம்பர் 2022 (15:22 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கருமாத்தூர் செல்லும் வழியிலுள்ள அழகுசிறை என்ற கிராமத்தில் விபிஎம்  பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

இந்தப் பட்டாசு ஆலையில் இன்று  திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டு, இதில், 5 பேர் பலியாகினர். மேலும், 13க்கும் மேட்பட்டோர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ALSO READ: விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 165 பேர் மீது வழக்குப் பதிவு !
 
இந்த பட்டாசு வெடி விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து  சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்துள்ள அம்மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஆய்வு செய்து வருகிறார்.



Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்