விஜயகாந்திற்கு என்ன ஆனதோ.. அதேதான் இனி பாஜகவுக்கும்- வைகோ மீது ஈவிகேஎஸ் விமர்சனம்

திங்கள், 28 நவம்பர் 2016 (15:36 IST)
விஜயகாந்திற்கு ஏற்பட்ட விளைவு தான் இனி பாஜகவுக்கும் ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 

 
ரூபாய் நோட்டு வாபஸை கண்டித்து நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஈரோடு ஜாம்பவான் வளாகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகே எஸ் இளங்கோவன் பங்கேற்றார். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பபட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ், விஜயகாந்த் மற்றும் வாசன் வைகோவுடன் கூட்டணியில் சேர்ந்ததால் அவர்களின் கட்சி சரிவை சந்தித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் தற்போது வைகோ பாஜகவை கையில் எடுத்துள்ளதால் அந்தக் கட்சிக்கும் அதே நிலை தான் ஏற்படும் என்றும் கூறினார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்