தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க, அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வரும் வேளையில், விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க ஒரு பக்கம் திமுகவும், மறுபக்கம் பாஜகவும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், திமுகவுடன் தேமுதிக ஏறக்குறைய இணைந்து விட்டதாகவும், 55-59 சீட் வரை தேமுதிகவிற்கு ஒதுக்க திமுக தரப்பு ஒத்துக் கொண்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில், தேமுதிகவுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி “ பழம் நழுவி பாலில் விழும் சூழ்நிலையில் இருக்கிறது” என்று கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜவடேகர் “தேமுதிகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்து விட்டதாக வெளியான செய்தி பொய்யான ஒன்று. தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. நேற்று விஜயகாந்த் பிரேமலாதாவுடன் தொலைபேசியில் கூட்டணி குறித்து பேசப்பட்டது.