காவிரி விவகாரம் ரஜினியை கோர்த்துவிடும் பாஜக!

புதன், 14 செப்டம்பர் 2016 (16:07 IST)
காவிரி பிரச்சனை தமிழகம், கர்நாடக என இரு மாநிலத்திலும் காலம் காலமாக நீடித்து வரும் முக்கிய பிரச்சனை. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகத்தில் கலவரம் மூண்டது.


 
 
இந்த விவகாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கு ஆதரவாக பேச வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்து வந்தது. அவர் மௌனமாக இருந்ததை சமூக வலைதளத்தில் பலர் விமர்சித்தனர்.
 
இந்நிலையில் இந்த கலவரத்தை கண்டித்தும் கர்நாடக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ரஜினி இந்த விவகாரத்தில் பேச வேண்டும் என வலியுறுத்தினார்.
 
ஆர்பாட்டத்தில் தமிழிசை பேசியபோது, இரு மாநில போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சனைகள் எழும் போது இரு மாநில மக்களுக்கும் நன்கு அறிமுகமான ரஜினிகாந்த் போன்ற திரையுலகத்தினர் பேச வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்