இந்த விவகாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கு ஆதரவாக பேச வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்து வந்தது. அவர் மௌனமாக இருந்ததை சமூக வலைதளத்தில் பலர் விமர்சித்தனர்.
ஆர்பாட்டத்தில் தமிழிசை பேசியபோது, இரு மாநில போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சனைகள் எழும் போது இரு மாநில மக்களுக்கும் நன்கு அறிமுகமான ரஜினிகாந்த் போன்ற திரையுலகத்தினர் பேச வேண்டும் என்றார்.