வரும் ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் அன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு இந்தியாவின் முக்கியமான தலைவர்கள் வர உள்ளனர். ஆனால் பாஜக, அதிமுக போன்ற கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு விடுக்காமல் புறக்கணித்துள்ளது.
ராகுல் காந்தி, லாலுபிரசாத் யாதவ், நித்திஷ் குமார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் ஜூலை மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனையடுத்து லாலுபிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, மாயாவதி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் திமுக எதிர்க்கட்சிகளை அழைத்து கருணாநிதிக்கு வைரவிழா எடுக்க உள்ளது.