மக்களுக்கு எதிரான சட்டங்கள்...மீனாட்சியை கும்பிட்டால் போதுமா?? மோடிக்கு நடிகை ரோகிணி கேள்வி

வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (23:30 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்-2021  வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் கவர்ந்தனர். இந்தப் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள்மேயர் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து  திமுக –மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பொன்னுதாய் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நடிகை ரோகிணி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்து மக்களைக் கொடுமைப்படுத்தினர். இதுபோல் மக்களை வதைக்கின்ற பல திட்டங்களை அமல்படுத்திவிட்டு இப்போது மதுரைக்கு வந்த் மீனாட்சி அம்மனை கும்பிட்டால் மட்டும் போதுமா?பாஜகவின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராக உள்ளது என விமர்சித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்