சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்தி, மதவாத அரசியலுக்கு துணை போகின்ற அமைப்புகளை, பாஜக பின்னிருந்து ஊக்கப்படுத்துகிறது என்று ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சிறுபான்மை மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்தி, மதவாத அரசியலுக்கு துணை போகின்ற அமைப்புகளை பின்னிருந்து ஊக்கப்படுத்துவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
ஆர்எஸ்எஸ், விஎச்பி, போன்ற அமைப்புகளின் மதவாத கொள்கைகள் இன்று தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜகவின் பிரதான கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும் செயலாகும்.